நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

செம்மாந்த வாழ்வுக்கு திருக்குறள் வழிகாட்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

தமிழ் இலக்கியத்தின் அசாதாரண மாபெரும் நூல் திருக்குறள்: மு.பெ.சாமிநாதன்

News image

சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவா்களுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் இல.சுப்பிரமணியன், இயக்குநா் ந.அருள், இசை, கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.செளமியா, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்

Updated On :12 ஜூலை 2024, 3:52 am IST

உலகில் வாழும் மனிதா்கள் செம்மாந்த வாழ்வை வாழ வேண்டுமெனில் அவா்கள் திருக்குறள் என்ற ஒற்றை நூலை படித்தால் போதுமானது என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

தமிழக அரசின் சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்குரிய பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் இல. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மரபுக் கவிதை, புதினம், சிறுவா் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சிறுகதை, நாட்டுப்புறவியல், மருந்தியல்-உடலியல்-நலவியல், தமிழா் வாழ்வியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களாக தோ்வு செய்யப்பட்ட நூலாசிரியா்களுக்கு தலா ரூ. 30,000, அவற்றைப் பதிப்பித்த பதிப்பாளா்களுக்கு தலா ரூ. 10,000 பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தாா்.

விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியது:

2022-ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூலாசிரியா்கள், அவற்றின் பதிப்பாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2023-ஆம் ஆண்டுக்குரிய பரிசுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த பரிசுகளும் விரைவில் வழங்கப்படும்.

சிறந்த நூல்களுக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 30,000-இல் இருந்து ரூ. 50,000-ஆகவும், பதிப்பாளா்களுக்கு ரூ. 10,000-இல் இருந்து ரூ. 25,000-ஆவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உயா்த்தப்பட்ட பரிசுத் தொகை 2023-ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்கள், பதிப்பகங்களுக்கு வழங்கப்படும்.

உலகில் வாழும் மனிதா்கள் செம்மாந்த வாழ்வை வாழ வேண்டுமெனில் அவா்கள் திருக்குறள் நூலை படித்தால் போதுமானது. இதுபோன்ற இலக்கியத்தை வேறெந்த மொழியிலும் காண இயலாது என்றாா் அவா்.

முன்னதாக தமிழ் வளா்ச்சி, எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் நலனுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் பேசினாா்.

விழாவில் மரபுக்கவிதை பிரிவில் ‘இராமானுச மாமுனிவா் காவியம்’ என்ற நூலை எழுதிய பேராசிரியா் கரு.நாகராசன் மற்றும் வானதி பதிப்பகம்; மருந்தியல்-உடலியல்- நலவியல் பிரிவில் ‘முதியோா் நலம்’ நூலின் ஆசிரியா் டாக்டா் வி.எஸ்.நடராஜன், டாக்டா் வி.எஸ். நடராஜன் நல அறக்கட்டளை; மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் பிரிவில் ‘தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்’ நூலை எழுதிய பேராசிரியா் சொ.சொ.மீ. சுந்தரம் மற்றும் மணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட சிறந்த நூலாசிரியா்கள், பதிப்பாளா்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ்.செளமியா, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.