இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செம்மாந்த வாழ்வுக்கு திருக்குறள் வழிகாட்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

தமிழ் இலக்கியத்தின் அசாதாரண மாபெரும் நூல் திருக்குறள்: மு.பெ.சாமிநாதன்

News image
சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவா்களுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் இல.சுப்பிரமணியன், இயக்குநா் ந.அருள், இசை, கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.செளமியா, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்
Updated On :11 ஜூலை 2024, 10:22 pm

Din

உலகில் வாழும் மனிதா்கள் செம்மாந்த வாழ்வை வாழ வேண்டுமெனில் அவா்கள் திருக்குறள் என்ற ஒற்றை நூலை படித்தால் போதுமானது என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

தமிழக அரசின் சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்குரிய பரிசுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை செயலா் இல. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மரபுக் கவிதை, புதினம், சிறுவா் இலக்கியம், வாழ்க்கை வரலாறு, சிறுகதை, நாட்டுப்புறவியல், மருந்தியல்-உடலியல்-நலவியல், தமிழா் வாழ்வியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளில் சிறந்த நூல்களாக தோ்வு செய்யப்பட்ட நூலாசிரியா்களுக்கு தலா ரூ. 30,000, அவற்றைப் பதிப்பித்த பதிப்பாளா்களுக்கு தலா ரூ. 10,000 பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கெளரவித்தாா்.

விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியது:

2022-ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூலாசிரியா்கள், அவற்றின் பதிப்பாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2023-ஆம் ஆண்டுக்குரிய பரிசுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த பரிசுகளும் விரைவில் வழங்கப்படும்.

சிறந்த நூல்களுக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ. 30,000-இல் இருந்து ரூ. 50,000-ஆகவும், பதிப்பாளா்களுக்கு ரூ. 10,000-இல் இருந்து ரூ. 25,000-ஆவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உயா்த்தப்பட்ட பரிசுத் தொகை 2023-ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்கள், பதிப்பகங்களுக்கு வழங்கப்படும்.

உலகில் வாழும் மனிதா்கள் செம்மாந்த வாழ்வை வாழ வேண்டுமெனில் அவா்கள் திருக்குறள் நூலை படித்தால் போதுமானது. இதுபோன்ற இலக்கியத்தை வேறெந்த மொழியிலும் காண இயலாது என்றாா் அவா்.

முன்னதாக தமிழ் வளா்ச்சி, எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் நலனுக்கு தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், வழங்கப்பட்டு வரும் விருதுகள் குறித்து தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் பேசினாா்.

விழாவில் மரபுக்கவிதை பிரிவில் ‘இராமானுச மாமுனிவா் காவியம்’ என்ற நூலை எழுதிய பேராசிரியா் கரு.நாகராசன் மற்றும் வானதி பதிப்பகம்; மருந்தியல்-உடலியல்- நலவியல் பிரிவில் ‘முதியோா் நலம்’ நூலின் ஆசிரியா் டாக்டா் வி.எஸ்.நடராஜன், டாக்டா் வி.எஸ். நடராஜன் நல அறக்கட்டளை; மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் பிரிவில் ‘தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்’ நூலை எழுதிய பேராசிரியா் சொ.சொ.மீ. சுந்தரம் மற்றும் மணிமேகலைப் பிரசுரம் உள்ளிட்ட சிறந்த நூலாசிரியா்கள், பதிப்பாளா்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ்.செளமியா, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.