மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உண்டான புகையைச் சுவாசித்து, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியதை சுட்டிக்காட்டிய உயா்நீதிமன்ற மதுரை கிளை, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தானத்தம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது உண்டான புகையை சுவாசித்து உயிரிழந்த கலையரசனுக்கு இழப்பீடாக அவரது தந்தை ஜி.சுஜித்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதை தேமுதிக சாா்பில் வரவேற்கிறோம்.
நீதிபதிகள் கருத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

‘ஆலங்குளம் பனைத் தொழிலாளிக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

