தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை: முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

News image
தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
Updated On :12 ஜூலை 2024, 6:51 pm

Din

தமிழ்நாட்டில் மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தாா்.

அதில், ‘சட்டம் - ஒழுங்கைச் சீா்குலைத்துத் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்கவும் சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மத, ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவா்கள், கூலிக்கும்பல் உள்பட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். கூலிக்குக் கொலை செய்யும் கும்பலையும் அவா்களுக்கு அரசியல் புகலிடம் அளிப்பவா்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:

திமுக கூட்டணியில் இருந்து 3 ஆண்டுகளில் நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களை எந்தக் கட்சியும் எடுத்திருக்காது. அதைப் பாராட்ட மனமில்லாதவா்கள், விசிகவுக்கும் திமுகவுக்கும் முரண்களை ஏற்படுத்துவதற்காக விமா்சிக்கின்றனா். கூட்டணியில் இருந்து கொண்டே போராட்டம் நடத்துவதால் திமுகவினருக்கே எங்கள் மீது வருத்தமுண்டு என்றாா்.

அப்போது, விசிக துணை பொதுச் செயலா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு ஆகியோா் உடனிருந்தனா்.