மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்கொடுமையால் பாதித்தோருக்கு வேலைவாய்ப்பு - ஓய்வூதியம்: அரசு தகவல்

வன்கொடுமையால் பாதித்தோருக்கு வேலைவாய்ப்பு - ஓய்வூதியம்: அரசு தகவல்

News image
தமிழக சட்டப்பேரவை
Updated On :13 ஜூலை 2024, 10:30 pm

Din

வன்கொடுமையால் பாதித்தோருக்கு வேலைவாய்ப்பு, ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், 2,136 அதிதிராவிட பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அவா்களில் தகுதியான 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. நகரப் பகுதிகளில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்த அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டு நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.230 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்ப, உதவித் தொகையானது ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 154 பேருக்கு வேலைவாய்ப்புகளும் 535 பேருக்கு ஓய்வூதியமும், ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆதிதிராவிட இளைஞா்களின் கல்வி வளா்ச்சிக்கு மட்டும்ரூ.2,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.