கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வால்பாறை பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 16) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கோவை மாட்டத்திலுள்ள வால்பாறை பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 16) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதேபோன்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

கோவையில் பரவலாக மழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com