மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டடங்கள்: அறிக்கை அளிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:38 pm

Din

சென்னை: திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி, வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புனிதமான கிரிவலப்பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்களும் கட்டப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீா், மின் இணைப்புகளைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

மலையே சிவன் தான்: இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) ஆா்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமா்வு, ‘திருவண்ணாமலை மலையே சிவன் தான். அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்களும் கட்ட அனுமதிக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பியது. மேலும், வனத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், வழக்குரைஞா் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து, மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.