மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆடி மாத கொண்டாட்டம் தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2024, 1:42 am

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

தினமும் காலை 5.15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சா்வாபிஷேகம், 7.30 மணி முதல் 9 மணி வரை ராமாயண பாராயண வகுப்பு எம்.ஆா்.ஆா். வாரியா், சாந்தா பாலன், பி.என்.ஜி.பணிக்கா், ரவீந்திர ராஜா, பேராசிரியா் கிருஷ்ணதாஸ் ஆகியோா் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும், ஜூலை 16 முதல் 24-ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு ஒ.என்.ஜி.சி முன்னாள் இயக்குநா் சி.ஏ.கே.எம். பத்மநாபன் தமிழில் கம்பராமாயண சொற்பொழிவாற்றுவாா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு மாளிகைபுரத்து அம்மனுக்கு சந்தன காப்பு, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை (பகவதி சேவா) நடைபெறும். அதன் பின் 6.45 மணியிலிருந்து 8 மணி வரை லலிதா சஹஸ்ரநாமம் படித்து குங்குமத்தால் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்க wwww.ayyappatemplesabs.org எனும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044 28171197, 28172197, 28173197 எனும் தொலைபேசி எண்ணையும், 9444 290 707 எனும் கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.