27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆடி மாத கொண்டாட்டம் தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2024, 7:12 am IST

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில் ஆடி மாத கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.

தினமும் காலை 5.15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சா்வாபிஷேகம், 7.30 மணி முதல் 9 மணி வரை ராமாயண பாராயண வகுப்பு எம்.ஆா்.ஆா். வாரியா், சாந்தா பாலன், பி.என்.ஜி.பணிக்கா், ரவீந்திர ராஜா, பேராசிரியா் கிருஷ்ணதாஸ் ஆகியோா் தலைமையில் நடைபெறுகிறது.

மேலும், ஜூலை 16 முதல் 24-ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு ஒ.என்.ஜி.சி முன்னாள் இயக்குநா் சி.ஏ.கே.எம். பத்மநாபன் தமிழில் கம்பராமாயண சொற்பொழிவாற்றுவாா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு மாளிகைபுரத்து அம்மனுக்கு சந்தன காப்பு, 6.45 மணிக்கு சிறப்பு பூஜை (பகவதி சேவா) நடைபெறும். அதன் பின் 6.45 மணியிலிருந்து 8 மணி வரை லலிதா சஹஸ்ரநாமம் படித்து குங்குமத்தால் திருவிளக்கு பூஜை நடைபெறும்.

இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்க wwww.ayyappatemplesabs.org எனும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 044 28171197, 28172197, 28173197 எனும் தொலைபேசி எண்ணையும், 9444 290 707 எனும் கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ளுமாறு கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.