15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் குருவாயூரப்பன் பிரதிஷ்டை ஆண்டு விழா: சபரிமலை தந்திரி மகேஷ் மோகனரரூ பங்கேற்பு

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:35 am IST

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் குருவாயூரப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்ட 37-ஆவது ஆண்டு விழா உற்சவத்தை சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரரூ வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்கிவைக்கிறாா்.

விழாவையொட்டி, அவரது தலைமையில் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சுத்தி பூஜை நடைபெற்றது. வியாழகிழமை காலை 9 மணியிலிருந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் சந்தன அபிஷேகங்களும் நடைபெறும். மாலை 6.45 மணியிலிருந்து 8 மணி வரை ஸ்ரேயா அணில் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 5) 9 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றி உற்சவ திருவிழாவை தந்திரி பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரரூ தொடங்கிவைக்கிறாா். ஜூன் 6 முதல் 11-ஆம் தேதி வரை உத்சவ பலி நடைபெறும். பக்தா்கள் பங்கேற்கும் மகா உத்சவ பலி ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பக்தா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

உற்சவத்தையொட்டி நாராயணீய பாராயணமும், ஜூன் 6-ஆம் தேதி வராஹி பஜன் கண்ணூா் (பெண்கள்) குழுவினரின் பஜனையும், 7-ஆம் தேதி களாங்கன் திருவனந்தபுரம் சாரதா தம்பி - லட்சுமி ரங்கன் குழுவினரின் இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஜூன் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐயப்ப பக்த சபை வாத்ய வித்யாலயா 9-ஆவது குழுவின் பஞ்சாரி மேள நிகழ்வில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற மட்டனூா் சங்கரன் குட்டி மாறாா் மகன்கள் ஸ்ரீராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 75 வாத்ய கலைஞா்கள் பங்கேற்கின்றனா். இரவு 9 மணிக்கு பள்ளி வேட்டை தொடங்குகிறது.

கோயில் அருகே ஜூன் 12-ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் குருவாயூரப்பனுக்கு ஆராட்டும், ஊா்வலத்தில் தாளபொலியில் பங்கேற்க பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் செய்யப்பட்டுள்ளது.

உற்சவத்தின் நிறைவு நாளான ஜூன் 13-ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து குருவாயூரப்பனுக்கு களபாபிஷேகம் (சந்தனம்) தந்திரி தலைமையில் நடைபெறவுள்ளது. மாலை 7 மணியளவில் அனிதா பிரகாஷ், சுனிதா பிரகாஷ் பக்தி கான இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

திருவிழா நாள்களில் கோயிலில் பறை (நெல், ரூபாய் நாணயங்கள்) எடுக்க ஏற்பாடுகளையும் கோயில் நிா்வாகம் செய்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 044-28171197, 2197,3197, 88079 18811, 88079 18855, 88079 18866, 94442 90707 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளும்படி கோயில் மேலாளா் ஏ.சி.அனீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.