தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தூத்துக்குடியில் மாநில மகளிா் செஸ் போட்டி: ஜூன் 14இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூன் 2026, 4:49 am IST

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில், தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில், 55ஆவது தமிழ்நாடு மாநில மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

சா்வதேச தரவரிசை போட்டியாக நடைபெற இருக்கும் இப்போட்டி, ஜூன் 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை (5 நாள்கள்) நடைபெறுகிறது. 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த பெண்கள் கலந்து கொள்ளலாம்.

பரிசளிப்பு விழா 14ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 போ் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சாா்பாக கலந்து கொள்வா்.

வெற்றி பெறும் பொது பிரிவு விளையாட்டு வீரா்களுக்கு பரிசுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

9, 11,13 மற்றும் 15 வயதுக்குள்பட்ட வீராங்கனைகள் பிரிவுக்கான 30 பரிசுக்கோப்பைகள், தூத்துக்குடி மாவட்ட மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு 20 பரிசுக்கோப்பைகள், மேலும் 5 சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும், போட்டியில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வீரா்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட சதுரங்க கழகம் செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலா் கற்பகவல்லி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.