கோப்புப் படம்
கோப்புப் படம்

மொஹரம்: மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

மொஹரம் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஜூளை 16) அறிவித்தது.

மொஹரம் பண்டிகை நாளை அனுசரிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையால், நாளை அரசு விடுமுறை என்பதால், சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை (ஜூலை 17) இயக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும்,

அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மொஹரம் பண்டிகையையொட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com