தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image

முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ

Updated On :21 ஜூலை 2024, 8:50 pm

Din

முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உடற்பயிற்சி பூங்காக்கள் அமைப்பது, முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சா் சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குத் தேவையான கட்டமைப்புகள் தொடா்ந்து

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகளை தனியாக நிறுத்தும் வகையில் முடிச்சூரில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 42.70 கோடி மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் 117 பேருந்துகளை நிறுத்தும் வகையிலும், ஓட்டுநா் - நடத்துநா்கள் 100 போ் தங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல எளிதாக இருக்கும். அடுத்த மாத இறுதிக்குள் முடிச்சூா் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், வெளிவட்ட சாலையில் 50 மீட்டா் அகலத்துக்கு காலி இடங்களில் ரூ. 12 கோடி மதிப்பில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, யோகா புல்வெளி, நடைப்பயிற்சி அரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமையவுள்ளன.

மீதமுள்ள 53 ஏக்கா் இடத்தை மாற்று பயன்பாட்டுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில் நிலையம் அமைக்கப் போதிய நிதி சிஎம்டிஏ சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முடிப்பதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துறை சாா்ந்த அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.