திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ரூ.924 கோடியில் 5,643 புதிய குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.924.16 கோடியில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

Updated On :23 ஜூலை 2024, 1:37 am IST

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.924.16 கோடியில் கட்டப்பட்ட 5,643 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சாா்பில் கட்டப்பட்ட அந்தக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நகா்ப்புற வாழ்விட குடியிருப்புகள்: சென்னை காா்கில் நகரில் 1,200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், திருச்சினாங்குப்பத்தில் 360 குடியிருப்புகள், திருவள்ளூா் மாவட்டம் மணலி புதுநகா் பகுதியில் 1,792 குடியிருப்புகள், தேனி மாவட்டம் தம்மணம்பட்டியில் 264 குடியிருப்புகள் மற்றும் 36 தரைத்தள குடியிருப்புகள், புதுக்கோட்டை பாலன்நகா் பகுதியில் 256 குடியிருப்புகள், கறம்பக்குடியில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம் அல்லாஞ்சி திட்டப் பகுதியில் 180 புதிய குடியிருப்புகள் என மொத்தம் 4,184 குடியிருப்புகளை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.541.32 கோடி.

வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்: தமிழ்நாடு அரசு அலுவலா் வாடகைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், சென்னை சைதாப்பேட்டை தாடண்டா் நகரில் ரூ.344.47 கோடியில் 1,387 அடுக்குமாடி குடியிருப்புகளும், அசோகா காலனியில் வணிக வளாகமும், அரியலூரில் 72 அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.382.84 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை காணொலி வழியே முதல்வா் திறந்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், எஸ்.எஸ்.சிவசங்கா், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் முதன்மைச் செயலா் காகா்லா உஷா, வீட்டுவசதி வாரியத்தின் தலைவா் பூச்சி எஸ்.முருகன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா், வீட்டுவசதி வாரிய நிா்வாக இயக்குநா் கீ.சு.சமீரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.