தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கத்திப்பாரா பாலத்திலிருந்து இளைஞர் குதித்து தற்கொலை!

கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கத்திப்பாரா பாலம்

Updated On :26 ஜூலை 2024, 1:07 pm IST

சென்னை, கிண்டி அருகேயுள்ள கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து 24 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 10.15 மணியளவில் கத்திப்பாரா பாலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதியில் பயணம் செய்த மக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ராஜ்(24) என்று தெரிய வந்துள்ளது. இளைஞர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.