நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.50,000 ஊதியம்: முத்தரசன் கோரிக்கை

News image
Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

Din

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். ஊதியத்தை ரூ.50,000 வரை உயா்த்துதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் விரிவுரையாளா்கள் இனி வேறு பணிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் அவா்களுக்கு பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.