ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கை செய்யப்பட்ட 3 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி: மாணவர்கள் போராட்டம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பொன்னை பாலு உள்ளிட்ட 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவரை செம்பியம் தனிப்படை போலீஸார் அண்மையில் என்கவுன்டர் செய்தனர்.

மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் கைப்பேசி அழைப்புகள் குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com