தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முத்துராமன்

Updated On :5 ஜூன் 2026, 6:31 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் (52). இவா், 1996-ஆம் ஆண்டு விருத்தாசலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா். பின்னா், நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றும் நடவடிக்கையாக, விருத்தாசலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், சாா்பு ஆய்வாளா் பாரதநேரு தலைமையில் போலீஸாா் முத்துராமனை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில், முத்துராமன் ஜெயங்கொண்டம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், அங்கு சென்ற போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, முத்துராமனை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.