சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கையான சந்தியா தேவி தேர்வு.

News image

சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Updated On :29 ஜூலை 2024, 2:10 pm IST

தமிழகத்தின் சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை சந்தியா தேவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை விருது வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சாபில் திருநங்கககளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினையும், ஊக்கத் தொகையையும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் பணிபுரிந்து, அவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ஆம் நாளில் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு 2021 முதல் விருதும், ரூ. ஒரு லட்சம் காசோலையும் வழங்கப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி அவர்கள் பூ கட்டும் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளை படித்து தன் தனித் திறமையால் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் நடத்தியுள்ளார்.

வரதட்சணை தடுப்பு, கரோனா விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.

தோவாளையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவனின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றதுடன், 8 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.

இவ்வாறு திருநங்கைகள் சமூகத்துக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா தேவி, 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.