திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் பிறப்பிப்பு
திருமாவளவன் (கோப்புப் படம்)
திருமாவளவன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003ஆம் ஆண்டில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

தற்போது, வழக்கில் ஆஜராகாததாலும், வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததாலும், திருமாவளவனுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருமாவளவன் (கோப்புப் படம்)
மீட்புப் படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வரவேண்டாம்: பினராயி விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com