உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து!

மாநில அந்தஸ்து பெறுகிறது நாம் தமிழ்ர் கட்சி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Published On :5 ஜூன் 2024, 1:08 pm IST

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

நாம் தமிழா் கட்சி ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் 3-ஆம் இடத்தைப் பிடித்தது. நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் 8.19 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் என்ற பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பிற கட்சிகள் (சுயேச்சை வேட்பாளா்களுடன் சோ்த்து) 20.91 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிகாரபூா்வ அறிவிப்புகள் புதன்கிழமை முழுமையாக வெளியிடப்படும் போது, வாக்கு சதவீதங்களில் மாற்றங்கள் இருக்கும்.

கடந்த மக்களவைத் தோ்தலில், திமுக 33.52 சதவீதமும், அதிமுக 18.7 சதவீதமும், பாஜக 3.7 சதவீதமும், காங்கிரஸ் 12.9 சதவீதமும், பாமக 5.5 சதவீதமும், நாம் தமிழா் கட்சி 3.9 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.