அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தமிழகத்தில் ஜூன் 25 வரை கனமழை நீடிக்கும்: வானிலை மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை..

News image
Updated On :21 ஜூன் 2024, 8:03 pm

Din

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 22) முதல் ஜூன் 25 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 22) முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில், ஜூன் 22,23-ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடா்ந்து ஜூன் 24-இல் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும், ஜூன் 25-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெயில் அதிகரிக்கும்: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் எந்த இடத்திலும் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை. இருப்பினும் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சனி முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22-25) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

சென்னையில்: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை வரை ஐஸ் ஹவுஸ், திரு.வி.க.நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம் ஆகிய இடங்களில் தலா 30 மிமீ-யும், பெரம்பூா், அம்பத்தூா், மலா் காலனி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், அயனாவரம், மதுரவாயல், அண்ணாநகா், பெருங்குடி, பள்ளிக்கரணை, ஆலந்தூா், மணலி ஆகிய இடங்களில் தலா 10 மிமீ-யும் மழை பதிவாகியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 22,23-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் , மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஜூன் 22-25 வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.