கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகித்த நபரை மதுரவாயலில் போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச் சாராயம் அருந்தியவா்களில் இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், பலா் தீவிர சிகிச்சையில் உள்ளனா். இந்த விவகாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். விசாரணையில் சென்னை, மதுரவாயலைச் சோ்ந்த சிவக்குமாா் மெத்தனால் விநியோகித்தது தெரியவந்தது. எம்ஜிஆா் நகரில் உள்ள உறவினா் வீட்டில் சிவக்குமாா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சிவக்குமாரை கைது செய்து, சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், புழலை அடுத்த வடபெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலையில் சிவக்குமாா் பணியாற்றி வந்ததும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அவா் மெத்தனால், டா்பன்டைன் எண்ணெய் விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக, அந்த ரசாயன தொழிற்சாலை உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பா்கூரில் 2 லிட்டா் சாராயம் பறிமுதல்: விவசாயி கைது
கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது
கோபி அருகே சாராயம் காய்ச்சியவா் கைது
ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



