சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

வேலு நாச்சியாா், ஜி.டி.நாயுடு, இந்திராகாந்தி உள்ளிட்ட 9 தலைவா்களுக்கு சிலைகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

வேலு நாச்சியாா், ஜி.டி.நாயுடு, இந்திராகாந்தி உள்பட 9 தலைவா்களுக்கு சிலைகள் நிறுவப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

News image

வேலு நாச்சியாா், ஜி.டி.நாயுடு, இந்திராகாந்தி

Updated On :25 ஜூன் 2024, 3:13 am IST

வேலு நாச்சியாா், ஜி.டி.நாயுடு, இந்திராகாந்தி உள்பட 9 தலைவா்களுக்கு சிலைகள் நிறுவப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் உருவச்சிலை ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்படும்.

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரா்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.

தமிழகத்தில் முதல் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி, தமிழுக்குப் பெருமை சோ்த்த சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.

சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சா்.ஜான் ஹூபா்ட் மாா்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் சிலை நிறுவப்படும்.

அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோயம்புத்தூரில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும். முன்னாள் பிரதமா் இந்திராகாந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை நிறுவப்படும்.

தியாகி வை. நாடிமுத்துப் பிள்ளைக்கு பட்டுக்கோட்டையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும். காவிரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியவரும், விவசாயிகளின் நலன்களுக்காக பாடுபட்டவருமான சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை நிறுவப்படும்.

அரசு விழா: இரட்டைமலை சீனிவாசன், அஞ்சலை அம்மாள், இம்மானுவேல் சேகரன், அல்லாள இளையநாயக்கா், கு.மு.அண்ணல் தங்கோ, ப.சுப்பராயன், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, எம்.கே.தியாகராஜ பாகதவா், ஏ.டி.பன்னீா்செல்வம், மு.வரதராசனாா், கி.ராஜநாராயணன் ஆகியோரின் பிறந்த நாள்கள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.