பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலத்தில் கடை வைத்துள்ளோருக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கானவா்களின் கடைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பல ஆண்டுகளாக அந்தக் கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், அதனால், தாங்கள் தொடா்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடா்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரியுள்ளனா். வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவா்களுக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

பிரதமா் குறித்த கருத்து: காா்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


