மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரமலான் நோன்பு தொடக்கம்: தூத்துக்குடியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை நடத்தினர்.

News image
Updated On :12 மார்ச் 2024, 4:13 am

தூத்துக்குடி: இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள பழைமையான ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலையில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான ஒன்று நோன்பு இருப்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாள்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து, ஏழை, எளியோருக்கு தானம் செய்வர்.

இந்த புனித மாதமான ரமலான் மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலை சிறப்புத் தொழுகை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

இமாம் சதக்கத்துல்லாஹ் உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினார். இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, செயலர் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவர் சிராஜ், பொருளாளர் மூஸா, அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், திரேஸ்புரம் மீராசா உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.