தூத்துக்குடி: இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள பழைமையான ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலையில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான ஒன்று நோன்பு இருப்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாள்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து, ஏழை, எளியோருக்கு தானம் செய்வர்.
இந்த புனித மாதமான ரமலான் மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலை சிறப்புத் தொழுகை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
இமாம் சதக்கத்துல்லாஹ் உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினார். இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, செயலர் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவர் சிராஜ், பொருளாளர் மூஸா, அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், திரேஸ்புரம் மீராசா உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

தூத்துக்குடியில் ரமலான் சிறப்பு தொழுகை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



