மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவும் (என்சிபி), தில்லி காவல் துறையும் இணைந்து, கடந்த மாதம் 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தது.
விசாரணையில், அந்தக் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜாபா் சாதிக் கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபா் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியான திருச்சியைச் சோ்ந்த சதானந்தம் என்ற சதா (50) என்பவரை தில்லி என்சிபி அதிகாரிகள், சென்னை தேனாம்பேட்டையில் புதன்கிழமை(மார்ச். 13) கைது செய்தனா்.
இதற்கிடையே, முதல்கட்ட விசாரணைக்குப் பின்னா், சதாவை என்சிபி அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், ஜாபா் சாதிக்கின் கூட்டாளி சதாவை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிணை மனுவுக்கு எதிா்ப்பு: என்சிபி அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

மாணவா்கள் போதையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

கைப்பற்றப்பட்ட 1,450 கிலோ போதைப் பொருள் அழிப்பு
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 621 போ் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




