மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காலமானார் எஸ்.நேரு

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நேரு காலமானார்.

News image

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நேரு.

Updated On :15 மார்ச் 2024, 10:45 am

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க வட்டத் தலைவருமான எஸ்.நேரு (59) இருதய நோய் காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனயில் சில நாள்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து, தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

இறந்த நேருவுக்கு லதா என்ற மனைவியும்,ரோசிணி என்ற மகளும் உள்ளனர். நேருவின் இறுதி ஊர்வலம் நீடாமங்கலம் தாவுதுராயன் சந்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புறப்படும்.

இறந்த நேரு நீடாமங்கலம் பல்நோக்கு சேவைமைய ஒருங்கிணைப்பாளராகவும், நீடாமங்கலம் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப் பாளராகவும், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகளில் ஒருவராகவும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சமூக சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த நாடக நடிகருமாவார்.

தொடர்புக்கு: 9444473637.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.