மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது 3 நாட்களில் தெரியவரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த தேசமும் எதிர்நோக்கியிருந்த மக்களவைத் தேர்தல் தேதி இன்று(மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேனா என்பது 3 நாட்களில் தெரியவரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, கூட்டணி அமைப்பதில் உங்களைப்போல, நாங்களும் அவசரமாகத்தான் இருக்கிறோம். தேர்தல் களத்தில் சவாலாக எதையும் பார்க்கவில்லை. களம் எங்களுக்கு சாதகமாகதான் உள்ளது. தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றியை பாஜகவிற்கு அளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வாக்களிக்க 13 அடையாள ஆவணங்கள் எவை? வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப்படங்கள்!
சவால்; வாய்ப்பு; எதிர்காலம்...!

சின்னங்கள் படும் பாடு!

நியூசிலாந்து - பாகிஸ்தான் போட்டியா? பேட்டர்கள் - சுழற்பந்துவீச்சாளர்கள் இடையேயான போட்டியா?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

