சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாஜக வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்: வானதி சீனிவாசன்

News image

கோப்புப் படம்.

Updated On :17 மார்ச் 2024, 12:07 pm IST

பாஜக வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் மார்ச் 19ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பாஜகவில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு இன்னும் 2-3 நாட்களி அறிவிக்கப்படும்.

பாகிஸ்தானில் இருந்தெல்லாம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டதாக வதத்ந்திகள் பரவி வருகிறது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். பாஜக அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக கூறி வந்த நிலையில், தேர்தல் பத்திரத்தில் அந்த நிறுவனங்களின் பெயர் இல்லாதது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்க தயார் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 ஆண்டு கால ஆட்சியில் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள் என சொல்ல முடியுமா. தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜகவை கேள்வி கேட்கும் கட்சிகளிடம் விளக்கம் கேட்டால் பதில் இல்லை. திமுக அரசு மக்களுக்கு எதிராக உள்ளது.

சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திமுக அரசு திணித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.