யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களவைத் தேர்தலையொட்டி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மே 26 நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுகளை மே 26ம் தேதி நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை ஜுன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com