தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக ச. முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர் - ச.முரசொலி
பிறப்பு - 26.6.1978
படிப்பு - பி.எஸ்ஸி., பி.எல்.
பெற்றோர் - கே. சண்முகசுந்தரம் - தர்மசம்வர்த்தினி.
குடும்பம் - மனைவி எஸ். பொற்செல்வி, மகன் - ஆதவன்.
ஊர் - தென்னங்குடி, தஞ்சாவூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
இவர் இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், இளங்கலை சட்டப் படிப்பை பெங்களூரு ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
இவர் 2006 – 2011 வரை தஞ்சாவூர் திமுக ஒன்றியக் குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை திமுக பொதுக்குழு உறுப்பினராகவும், 2020-இல் தஞ்சாவூர் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022-இல் நடைபெற்ற திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றியக் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது தாத்தா எஸ். கந்தசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராகவும், தந்தை சண்முகசுந்தரம் 1971-ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்கள்.