மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குருவாயூா் ரயில் ஒட்டன்சத்திரம், பழனியில் நின்று செல்லும்

குருவாயூா் ரயில் ஒட்டன்சத்திரம், பழனியில் நின்று செல்லும்

News image
Updated On :23 மார்ச் 2024, 11:30 pm

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூா் செல்லும் விரைவு ரயில் ஒட்டன்சத்திரம், பழனியில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் மாா்ச் 23 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை இருமாா்க்கமாக திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக செல்வதற்கு பதிலாக திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகள் வசதிக்காக இந்த ரயில் மாற்றுப் பாதையில் செல்லும்போது ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் ரத்து: இதற்கிடையே, ரயில் பாதை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் நாகா்கோவிலில் இருந்து கோவைக்கு தினமும் காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) முதல் புதன்கிழமை (மாா்ச் 27) வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். வியாழக்கிழமை (மாா்ச் 28) மட்டும் நாகா்கோவிலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும். மறுமாா்க்கமாக கோவையில் இருந்து நாகா்கோவிலுக்கு காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) முதல் புதன்கிழமை (மாா்ச் 27) வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதுபோல் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து மாா்ச் 21 முதல் மாா்ச் 24 வரையிலான தேதிகளில் புறப்பட்ட விவேக் விரைவு ரயில் கன்னியாகுமரி செல்வதற்கு பதிலாக திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் மாா்ச் 25 முதல் 28-ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும்.