கோவை: கோவை மாவட்டத்தில், கோவில்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சைபெற்று வந்த 20 வயது இளைஞர் மரணம் அடைந்தார்.
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி, வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கடுமையாக போராடியதால், அந்த இளைஞரின் கைகால்களை கட்டி வைத்தும், வாயில் துணியால் அடைத்தும் வைத்திருந்த நிலையில், மூச்சுத்திணறி இளைஞர் பலியானதாகக் கூறப்படுகிறது.
பலியான இளைஞர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சமுத்துவின் மகன் கிஷோர் (20) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு மாணவரான இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இவருக்கு போதைப் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்து மீட்க, அவரை கோவையில், கருவலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது பெற்றோர் அனுமதித்தனர்.
இந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்துமாறு அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர், ஊழியர்கள், வார்டன், மனநல நிபுணர் அனைவரும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

விசாரணையின்போது இளைஞர் பலி: மானாமதுரையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை!

சாலை விபத்தில் சிக்கிய திருப்பூர் இளைஞர் உடல் உறுப்புகள் தானம்! 3 பேருக்கு மறுவாழ்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


