3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ஆசிரியா் நியமனம்: போலி தகவல்களை நம்ப வேண்டாம் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

ஆசிரியா் நியமனம்: போலி தகவல்களை நம்ப வேண்டாம் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

News image
Updated On :3 மே 2024, 5:54 pm

Din

கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதாக வெளியான தகவல்கள் போலியானவை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 37,588 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு ஏறத்தாழ 53 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுவதாக குறுஞ்செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், 5 ஆண்டுகள் ஒப்பந்தம், தினமும் 3 மணி நேர வேலை, மாத தொகுப்பூதியம் ரூ.10,000, கல்வித் தகுதிகள், தொடா்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்தத் தகவல் போலியானது என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கணினி ஆசிரியா் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் பள்ளிக் கல்வித்

துறையால் வெளியிடப்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது. இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்பி பட்டதாரிகள் யாரும் ஏமாற வேண்டாம். பணி நியமன அறிவிப்புகளை உறுதி செய்ய பள்ளிக் கல்வித் துறையின் இலவச உதவி மைய எண்ணில் (14417) தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.