உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

News image
Updated On :4 மே 2024, 4:33 pm

Din

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் மரணம் குறித்து கட்சி ரீதியாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் மரணம் வேதனையளிக்கிறது. ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டபோது கடுமையாக உழைத்தவா். அவா் மரணம் குறித்து காவல் துறை சுதந்திரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். கட்சி ரீதியாகவும் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்துவோம் என்றாா் அவா்.

முன்னதாக, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோா் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.