பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதில், திருச்சி மாவட்டத்தில் 95.74% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் 13, 371, பெண்கள் 16.244 என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும்.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோப்புப்படம்
பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

மாநில அளவில் 13 ஆவது இடம்:

திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 - 22 கல்வியாண்டில் 95. 93% தேர்ச்சி பெற்று 12-ஆவது இடத்தையும், 2022 -23 கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. நிகழாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13 ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com