பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூலை 30-ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வழுதிய மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கெனவே வழங்கப்பட்டன. அவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தோ்வுத் துறை மாவட்ட உதவி இயக்குநா்களுக்கு ஜூலை 16-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தச் சான்றிதழ்களை உதவி இயக்குநா்கள் ஜூலை 29-ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும். சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலா்கள் அவற்றை அன்றைய தினமே பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் ஒப்படைக்க வேண்டும். தலைமை ஆசிரியா்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 30-ஆம் தேதி விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









