புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
சவுக்கு சங்கர்
Updated On :8 மே 2024, 2:34 am

DIN

பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சவுக்கு சங்கா் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாா் குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸாரால் கடந்த 4-ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது ஐபிசி பிரிவுகள் 294(பி), 354(டி), 506(ஐ), 509 மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் தரப்பில் பிணை கோரிய மனு மீதான விசாரணையை மே 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேனி, சேலம் மற்றும் திருச்சி மாவட்ட காவல் நிலையங்களிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.