தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 94.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 309 பள்ளிகளில், 10,534 மாணவர்கள், 11,309 மாணவிகள் என மொத்தம் 21,843 பேர் தேர்வெழுதினர்.
அவர்களில் 9,645 மாணவர்கள், 10,973 மாணவிகள் என மொத்தம் 20,618 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 95.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 1.19-ஆக குறைந்துள்ளது. இதையைடுத்து கடந்த ஆண்டு 5ஆவது இடத்திலிருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 9 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.