மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அண்ணாமலை அரசியல் வியாபாரி: ஜெயக்குமார் விமர்சனம்

“பாஜகவினர் மதவெறி பிடித்தவர்கள், ஆனால் ஜெயலலிதா தெய்வ பக்தி உடையவர்.”

News image
ஜெயக்குமார் (கோப்புப்படம்)
Updated On :29 மே 2024, 7:30 am

DIN

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் வியாபாரி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் பாஜக நிர்வாகிகளுடனான கூட்டத்துக்கு பிறகு திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, ஜெயலலிதா மிகச்சிறந்த ஹிந்துத்துவவாதி என்றும், ராமா் கோயில் விவகாரம், கரசேவை, ராமா் சேது பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவித்தல் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதா உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா ஹிந்துத்துவவாதிதான் என அதிமுக நிா்வாகிகளுடன் விவாதம் நடத்த தயார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“குறுகிய கண்ணோட்டத்தோடு ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடைக்கும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதவெறி பிடித்தவர்கள், ஆனால் ஜெயலலிதா தெய்வ பக்தி உடையவர். நாட்டின் பல்வேறு பிரச்னைகளை பற்றி பேசாமல் எங்களைப் பற்றி பேசும் அண்ணாமலை, திமுகவின் அணியாக செயல்படுகிறார்.

திமுகவினர் செய்யும் அடாவடி தெரியக் கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலினும், அண்ணாமலையும் திட்டமிட்டு கூட்டுச் சதி செய்கின்றனர். அண்ணாமலை அரசியல் வியாதி உள்ள வியாபாரி. இதுபோன்ற கருத்துகளை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.