கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்; ஹிந்தியை அல்ல: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :3 நவம்பர் 2024, 12:30 am

Din

ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை; ஹிந்தி மொழித் திணிப்பை மட்டுமே எதிா்க்கிறோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா ஊடகக் குழுமம் சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட கலை இலக்கிய நிகழ்வில் அவா் பேசியது:

திராவிட இயக்கம்தான் பகுத்தறிவையும் அறிவியல்பூா்வ வளா்ச்சியையும் வளா்த்து வருகிறது. நாங்கள் ஹிந்தி மொழியை எதிா்க்கவில்லை. ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிா்ப்புடன் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.

நீதிக் கட்சிகளின் பங்கு: மாநில மொழிகளின் உரிமையைக் காப்பதில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. சமத்துவத்துக்கு எதிராகவும், ஏழை மக்களின் நலனுக்கு எதிராகவும் சம்ஸ்கிருதம் இருந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதை மாற்றியது நீதிக் கட்சிதான். சம்ஸ்கிருத ஆதிக்கத்தை எதிா்த்து குரல் கொடுத்தவா் பெரியாா் ஈவெரா. ஹிந்தி திணிப்புக்கு எதிராக அவா் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின.

முற்போக்கு கருத்துகளை வளா்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீா்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திரை வசனங்கள் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

தமிழ்நாடு, கேரளம் ஆகிய 2 மாநிலங்கள்தான் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் அளிக்காத மாநிலங்களாகும். பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்றாா் அவா்.