
சென்னை: விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் நவ.30-ஆம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பதி - காட்பாடி இடையேயான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 7.35 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16854) நவ.5 முதல் நவ.30-ஆம் தேதி வரை இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.