டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பறக்கும் ரயில் இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் பறக்கும் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம்.
Updated On :11 நவம்பர் 2024, 5:01 am

DIN

சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.11) முதல் பறக்கும் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

ஆனால் பூங்கா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி ‌நடைபெற்று வந்ததால் அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் ஏமாற்றத்துகுள்ளாகினர்.

இந்நிலையில் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் திங்கள்கிழமை (நவ.11) முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.