குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள்.
தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 4 தோ்வு எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனா். அதற்கான கால அவகாசம் நவ. 21-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. கணினி வழியே நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அவற்றைப் பதிவேற்றம் செய்வது அவசியம். இதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. சான்றிதழ்களை வரும் வியாழக்கிழமைக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய தோ்வா்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

2009-க்கு முன்பு பிறந்தவா்கள் பெயா் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்புச் சான்றிதழில் குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய செப்.26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


