புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

News image
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
Updated On :20 நவம்பர் 2024, 7:15 pm

Din

ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கத்திக்குத்தில் உயிரிழந்த ஆசிரியை ரமணி உடலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். அசோக் குமாா், கா. அண்ணாதுரை, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து பள்ளிக்குச் சென்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியா்களிடம் இச்சம்பவம் தொடா்பாக கேட்டறிந்த பின்னா் அவா் மேலும் கூறியது:

இந்த நாள் வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தால் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் ஏற்பட்ட அச்சம் நீங்கும் விதமாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அப்பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ஒரு பொதுவான இடத்தில் கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது. மேலும், அப்பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்த, சட்டத்துறையில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா்.