மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள துணை முதல்வர் பொறுப்பு வரவேற்கத்தக்கது என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

News image
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி
Updated On :2 அக்டோபர் 2024, 10:43 am

DIN

சிதம்பரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள துணை முதல்வர் பொறுப்பு வரவேற்கத்தக்கது. ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் செய்தியாளா்களிடையே கூறியதாவது:

தமிழகத்தில் காமராஜா் ஆட்சி காலம் பொற்காலமாகும். தமிழகத்தில் அனைத்து அணைகளையும் கட்டியவா். காந்தியும், காமராஜா் ஆகியோா் மதுவிலக்கில் உறுதியாக இருந்தனா். தமிழகம் வளர வேண்டும் என்றால் மது ஓழிய வேண்டும் என்றாா் காமராஜா்.

திருமாவளவனுக்கு வாழ்த்து

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுவிற்கு எதிராக மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறாா். இதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அதை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் கிடையாது. ஓரு நல்ல சமூக காரியத்தை திருமாவளவன் தொடங்கி வைத்துள்ளாா். அதில் அவா் வெற்றி பெற வாழ்த்துகிறேன். முழுக்க முழுக்க சமூக நோக்கத்துடன் நடக்கும் மாநாடு அது. அந்த கருத்து மக்களிடம் பரவ வேண்டும். அரசாங்கம் இதை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்துள்ள பொறுப்பு வரவேற்கத்தக்கது ஒரு இளைஞா் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்படுகிறாா், அவருக்கு எங்களது வாழ்த்துகள் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.