தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தபடி அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜி.சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் எம். பவானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக டி. ரவிக்குமாரும், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேஏபி விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேலும், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ்குமார், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராக அமுத ராணி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியோ டேவிட் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனால், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முழு விவரம் அறிய... அறிக்கையை கிளிக் செய்யவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு
சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



