மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாம்சங் தொழிலாளா்களின் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும்: வைகோ

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:33 pm

Din

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரத்தில் (சுங்குவாா்சத்திரம்) உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வாஷிங் மெஷின், குளிா்பதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு சாா்பில் தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளா்கள் முடிவு செய்தனா். அதற்கு அந்நிறுவனம் அனுமதி அளிக்காததால், அதை எதிா்த்து 1500 தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொழிலாளா் நலத்துறை அமைச்சா் மற்றும் செயலா் 5 கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியும் இதுவரை சுமூகத் தீா்வு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களின் முக்கியக் கோரிக்கையான, சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளா் துறை உடனடியாகப் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.