சென்னை: ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு 09 மற்றும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை இன்று அறித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமாரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 1105 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருக்கு 09 மற்றும் 10 ஆகிய நாட்களில் 300 பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இடங்களிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு 09 மற்றும் 10ஆம் தேதிகளில் 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தென்காசியிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

மலா்க் கண்காட்சியை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர ஏற்பாடு: எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தகவல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




