ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இது இந்தியா! இவர்தான் ரத்தன் டாடா!! பிரார்த்தனைக் கூட்டத்தில்..

இதுதான் இந்தியா, இவர்தான் ரத்தன் டாடா என்று சொல்லுமளவுக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் சில காட்சிகள்

News image
ரத்தன் டாடா- -
Updated On :10 அக்டோபர் 2024, 10:32 am

DIN

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபரும், எளிமைக்கும் கருணைக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டிய மாமனிதர் ரத்தன் டாடாவின் பிரார்த்தனைக் கூட்டத்தில் நெகிழ்ச்சியான காட்சி இடம்பெற்றிருந்தது.

தொழிலதிபர் ரத்தன் டாடா, அக்டோபர் 9ஆம் தி இரவு 11.30 மணிக்கு காலமானார். இந்திய தேசியக் கொடி போர்த்திய அவரது உடல் இன்று மும்பையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி ஓர்லியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்பு அங்குள்ள பிரார்த்தனைக் கூடத்தில் பிரார்த்தனை நடைபெறும்.

அவரது பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்க, பார்சி, முஸ்லிம், கிறிஸ்துவ, சீக்கிய, இந்து மதத் தலைவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடியுள்ளனர். அதுவும், ஒரேஇடத்தில் தோளோடு தோள் நின்று அவரது இறுதிப் பயணத்துக்கான பிரார்த்தனையில் பங்கேற்கிறார்கள்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர்தான் நாட்டின் உண்மையான அடையாளம் என்று பலரும் ரத்தன் டாடாவை புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மிகச் சிறந்த மனிதராக வாழ்வதுதான் மிகச் சிறந்த மிக முக்கிய மதம். மனிதநேயத்தையே அனைத்து மதங்களும் கொண்டாடுகின்றன. நாட்டின் ரத்தினம் போன்ற மனிதரை இழந்துவிட்டோம் என்றும், பல இந்திய மக்களும் தங்களது சொந்தத்தில் ஒருவரை இழந்தது போன்ற வலியையே அனுபவிப்பதாகவும் கருத்துகள் குவிந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.