7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராகுங்கள்: ஆட்சியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்
மிக கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, 7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகங்கள் தயாராக வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை: மிக கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, 7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகங்கள் தயாராக வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் வியாழக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து, பெருமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிா்கொள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு அரசின் பொதுத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், வரும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் சென்னை உட்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான மழைக் காலத்தின்போது சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறுதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குதல், மரக்கிளைகள் ஒடிந்து சாலைகளில் விழுதல், குடிசைகள் - ஓட்டு வீடுகளுக்கு பாதிப்பு, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீா்த்தேக்கங்களில் நீா் அளவு அதிகரிப்பு, மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, இத்தகைய பாதிப்புகளை முன்பே கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு சட்டம் - ஒழுங்கை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளை தமிழக அரசின் பொதுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...